العاديات

تفسير سورة العاديات

الترجمة التاميلية

தமிழ்

الترجمة التاميلية

ترجمة معاني القرآن الكريم للغة التاميلية، ترجمها الشيخ عبد الحميد الباقوي، نشرها مجمع الملك فهد لطباعة المصحف الشريف بالمدينة المنورة. عام الطبعة 1434هـ.

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالْعَادِيَاتِ ضَبْحًا﴾

1. மூச்சுத் திணர அதிவேகமாகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியமாக!

﴿فَالْمُورِيَاتِ قَدْحًا﴾

2. (அவை செல்லும் வேகத்தில் குளம்புகளிலிருந்து) நெருப்பைக் கக்கும்.

﴿فَالْمُغِيرَاتِ صُبْحًا﴾

3. இன்னும் அவை அதிகாலையில் (எதிரிகள் மீதும்) பாய்ந்து செல்லும்.

﴿فَأَثَرْنَ بِهِ نَقْعًا﴾

4. (அவ்வாறு வேகமாகச் செல்லும்போது, மேகத்தைப்போல்) புழுதியைக் கிளப்பும்.

﴿فَوَسَطْنَ بِهِ جَمْعًا﴾

5. பின்னர், (எதிரிகளின் படையின்) மத்தியில் நுழைந்துவிடும்.

﴿إِنَّ الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ﴾

6. (இத்தகைய குதிரைகள் மீது சத்தியமாக!) நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவன் ஆவான்.

﴿وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ﴾

7. நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாவான்.

﴿وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ﴾

8. நிச்சயமாக அவன் பொருள்களை மிக்க கடினமாகவே நேசிக்கிறான்.

﴿۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ﴾

9, 10.
அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?

﴿وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ﴾

9, 10.
அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?

﴿إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَخَبِيرٌ﴾

11.
நிச்சயமாக மனிதர்களுடைய இறைவன் (தீயவன் யார்? நல்லவன் யார்? என்று) அவர்களை அந்நாளில் நன்கு அறிந்து கொள்வான்.

الترجمات والتفاسير لهذه السورة: