البحث

عبارات مقترحة:

العلي

كلمة العليّ في اللغة هي صفة مشبهة من العلوّ، والصفة المشبهة تدل...

الرزاق

كلمة (الرزاق) في اللغة صيغة مبالغة من الرزق على وزن (فعّال)، تدل...

الخبير

كلمةُ (الخبير) في اللغةِ صفة مشبَّهة، مشتقة من الفعل (خبَرَ)،...

الترجمة التاميلية

ترجمة معاني القرآن الكريم للغة التاميلية، ترجمها الشيخ عبد الحميد الباقوي، نشرها مجمع الملك فهد لطباعة المصحف الشريف بالمدينة المنورة. عام الطبعة 1434هـ.

1- ﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالْمُرْسَلَاتِ عُرْفًا﴾


1. நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீது சத்தியமாக!

2- ﴿فَالْعَاصِفَاتِ عَصْفًا﴾


2. இன்னும் அதி வேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகள் மீது சத்தியமாக!

3- ﴿وَالنَّاشِرَاتِ نَشْرًا﴾


3.(மேகங்களை பல திசைகளில்) பரப்பிவிடுபவர்கள் மீதும் சத்தியமாக!

4- ﴿فَالْفَارِقَاتِ فَرْقًا﴾


4. (உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப்பவை(யான வேதங்கள்) மீதும் சத்தியமாக!

5- ﴿فَالْمُلْقِيَاتِ ذِكْرًا﴾


5, 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!

6- ﴿عُذْرًا أَوْ نُذْرًا﴾


5, 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!

7- ﴿إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ﴾


7. நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும்.

8- ﴿فَإِذَا النُّجُومُ طُمِسَتْ﴾


8. அந்நேரத்தில், நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும்.

9- ﴿وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ﴾


9. அப்போது வானம் திறக்கப்பட்டுவிடும்.

10- ﴿وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ﴾


10. அப்போது மலைகள் (தூசிகளைப் போல்) தவிடு பொடியாக்கப்படும்.

11- ﴿وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ﴾


11. அப்போது தூதர்கள் விசாரணைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.

12- ﴿لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ﴾


12. (இவை எல்லாம்) எதுவரை பிற்படுத்தப்பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீர் அறிவீரா)?

13- ﴿لِيَوْمِ الْفَصْلِ﴾


13. தீர்ப்பு கூறப்படும் நாள் வரைதான்!

14- ﴿وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ﴾


14. (நபியே!) தீர்ப்பு கூறப்படும் நாளின் தன்மையை நீர் அறிவீரா?.

15- ﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ﴾


15. (நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

16- ﴿أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ﴾


16. (அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தவர்களையும் நாம் அழித்துவிடவில்லையா?

17- ﴿ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ﴾


17. அதற்கு பின்னுள்ளவர்களையும் (அழிந்து போன அவர்களைப்) பின்தொடரும்படி நாம் செய்வோம்,

18- ﴿كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ﴾


18. (அவர்களையும் அழித்தோம்.) அவ்வாறே, இக்குற்றவாளிகளையும் நாம் (அழிந்துபோகச்) செய்வோம்.

19- ﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ﴾


19. ஆகவே, (நம் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

20- ﴿أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ﴾


20. ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களைப் படைக்கவில்லையா?

21- ﴿فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَكِينٍ﴾


21, 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,

22- ﴿إِلَىٰ قَدَرٍ مَعْلُومٍ﴾


21, 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,

23- ﴿فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ﴾


23. பின்னர் நாமே அதை (மனிதனாகவும்) நிர்ணயம் செய்தோம். நிர்ணயம் செய்பவர்களில் நாமே மிக மேலானோர்.

24- ﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ﴾


24. ஆகவே, (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

25- ﴿أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا﴾


25, 26. பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?

26- ﴿أَحْيَاءً وَأَمْوَاتًا﴾


25, 26. பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?

27- ﴿وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُمْ مَاءً فُرَاتًا﴾


27. அதில் உயர்ந்த மலைகளையும் நாம் அமைத்து (அவற்றிலிருந்து) மதுரமான நீரையும் உங்களுக்குப் புகட்டுகிறோம்.

28- ﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ﴾


28. (நம் அருட்கொடைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

29- ﴿انْطَلِقُوا إِلَىٰ مَا كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ﴾


29. ‘‘எ(ந்த நரகத்)தை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அதன் பாலே நீங்கள் செல்லுங்கள்.

30- ﴿انْطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ﴾


30. மூன்று கிளைகளையுடைய (நரகத்தின்) புகையின் நிழலின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்'' (என்றும் கூறப்படும்).

31- ﴿لَا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ﴾


31. அதில் (குளிர்ச்சிதரும்) நிழலுமிராது; உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய எதுவுமிராது.

32- ﴿إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ﴾


32. (எனினும்,) பெரிய மாளிகைகளைப்போன்ற நெருப்புக் கங்குகளை அது கக்கிக் கொண்டே இருக்கும்.

33- ﴿كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ﴾


33. அவை மஞ்சள் நிறமுள்ள (பெரிய) ஒட்டகங்களைப் போல் தோன்றும்.

34- ﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ﴾


34. (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

35- ﴿هَٰذَا يَوْمُ لَا يَنْطِقُونَ﴾


35. இது ஒரு நாளாகும். (இந்நாளில் எதுவுமே) அவர்கள் பேச சக்தி பெறமாட்டார்கள்.

36- ﴿وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ﴾


36. மேலும், புகல் கூறவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது.

37- ﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ﴾


37. (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

38- ﴿هَٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ﴾


38. இதுவே தீர்ப்பு நாள். உங்களையும், (உங்களுக்கு) முன்னுள்ளோரையும் (விசாரணைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிடுவோம்.

39- ﴿فَإِنْ كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ﴾


39. ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, ‘‘தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்'' (என்றும் கூறப்படும்).

40- ﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ﴾


40. (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

41- ﴿إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ﴾


41. நிச்சயமாக இறையச்சமுடையவர்கள், நிச்சயமாக (அந்நாளில் சொர்க்கத்திலுள்ள மரங்களின்) நிழல்களிலும் (அதன் அடியில் உள்ள) ஊற்றுக்களிலும் இருப்பார்கள்.

42- ﴿وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ﴾


42. அவர்கள் விரும்பிய கனிவர்க்கங்கள் அவர்களுக்குண்டு.

43- ﴿كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ﴾


43. (அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையின் காரணமாக, மிக தாராளமாக இவற்றைப் புசித்துப் பருகிக் கொண்டிருங்கள்'' (என்று கூறப்படும்).

44- ﴿إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ﴾


44. இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுப்போம்.

45- ﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ﴾


45. (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

46- ﴿كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُمْ مُجْرِمُونَ﴾


46. (இதைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தான்.

47- ﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ﴾


47. (இறைவனின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

48- ﴿وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ﴾


48. அவர்களை நோக்கி, ‘‘(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்'' என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே மாட்டார்கள்.

49- ﴿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ﴾


49. (அவனுடைய இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

50- ﴿فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ﴾


50. இதற்குப் பின்னர், எவ்விஷயத்தைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ!

الترجمات والتفاسير لهذه السورة: